5ம் தேதிக்குள் பாணதீர்த்த அருவிக்கு மீண்டும் படகு போக்குவரத்து
நெல்லை: பாபநாசம் பாணதீர்த்த அருவிக்கு வரும் 5ம் தேதிக்குள் மீண்டும் படகு போக்குவரத்து தொடங்குவது என்று நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தியாவில் உள்ள புலிகள் காப்பக பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் சில நிபந்தனைகளுடன் தடையை நீக்கியது. இதையடுத்து நெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது சம்பந்தமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்கள், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டிசம்பர் 7ம் தேதி முண்டந்ததுறை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் பாபநாசம் அணையில் இருந்து பாணதீர்த்த அருவிக்கு படகு போக்குவரத்து நடத்த அனுமதி வழங்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பாணதீர்த்த அருவிக்கு படகு போக்குவரத்து தொடங்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கலாமா என்பது குறித்து பாபநாசம் முண்டந்துறை வனச்சரக அலுலவகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து பாணதீர்த்த அருவிக்கு வரும் 5ம் தேதிக்குள் படகு போக்குவரத்து துவங்கவும், தற்போதுள்ள 24 படகுகளை மட்டும் அதிகம் சத்தம இல்லாமலும், சுற்றுச்சூழல் கெடாமலும், ஆயில் உள்ளிட்ட கழிவுகள் அணையில் கலக்காமலும் இயக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இதுவரை மாஞ்சோலை பகுதி வரை மட்டும அனுமதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இனி குதிரைவெட்டி வரை செல்ல அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications