பார்லிமென்ட்: இரு சபைகளையும் முடக்கிய ஹெலிகாப்டர் ஊழல், பெட்ரோல் விலை உயர்வு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பார்லிமென்ட்டில் இரு சபைகளும் ஹெலிகாப்டர் ஊழல் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு விவகாரத்தால் நாள் முழுவதும்முடங்கிப் போனது.
பார்லிமென்ட் இன்று காலை கூடிய போது இரு சபைகளிலும் ஹெலிகாப்டர் ஊழலை எதிர்க்கட்சிகள் எழுப்பினர். மேலும் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த இரண்டு விவகாரங்களை முன்வைத்தும் இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், அதிமுக எம்.பிக்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் இரு சபைகளிலும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு சபைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
பின்னர் அவை கூடுவதும் ஒத்தி வைப்பதுமாக இருந்தது. பின்னர் 3 மணியளவில் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications