''அன்புமணியை முதல்வராக்குவோம்!: பார்லி. தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10 தொகுதிகளில் வெல்வோம்''!

வரும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி மாமல்லபுரத்தில் ‘சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா- மாநாடு‘ நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் சேலம் வடக்கு, தெற்கு, மேற்கு, வீரபாண்டி தொகுதிகளில் இருந்து வன்னியர் இளைஞர்கள் கலந்து கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் சேலம் சிவதாபுரம் மாணிக்ககவுண்டர் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் காடுவெட்டி குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய கட்சியுடனோ, திராவிட கட்சிகளுடனோ கூட்டணி அமைக்காமல் பாமக தனித்து போட்டியிடும் என்று டாக்டர் ராமதாஸ் ஐயா அறிவித்துள்ளார். தனித்து போட்டியிடுவதால் வன்னியர்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் பயணம் தொடரப்பட்டுள்ளது.
அன்புமணியை முதல்வராக்க வேண்டும்:
எனவே நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில் வெற்றி பெறுவதுதான் நமது இலக்கு. அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் கோடி வன்னியர்களில் ஒருவரான டாக்டர் அன்புமணியை தமிழக முதல் அமைச்சர் பதவிக்கு அனுப்பிட வேண்டும்.
வன்னியர் ஒருவர் முதல்வர் ஆனால்தான் நமது சமுதாயத்திற்கு பாதுகாப்பு கிடைக்கும். எனவே, யாரையும், எந்த சமுதாயத்தையும் நம்பாமல் வன்னியர்களை ஒருங்கிணைக்கும் பணியில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி மற்றும் என்னை போன்றவர்கள் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த வேளையில்தான் தர்மபுரி கலவர சம்பவம் நடந்து விட்டது. பாமக, விடுதலை சிறுத்தையுடன் ஒருங்கிணைந்து இருக்கும் வேளையில், தர்மபுரி சென்று வந்த திருமாவளவன் அங்கு நடந்த கலவர சம்பவத்திற்கு வன்னியர்களும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்தான் காரணம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் சொல்லிவிட்டார்.
அவரும் டாக்டர் ராமதாஸ்தான் காரணம் என்று அறிக்கை வெளியிட்டார். ஆனால், அங்கு உண்மையில் நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். தர்மபுரி கலவரத்திற்கு பாமகவும் டாக்டர் ராமதாசும் பொறுப்பாக முடியாது. போலீசார் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றார் குரு.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications