Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெய்ஹிந்த்..தம்பி ரெண்டு சப்பாத்தி போடுப்பா...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகாரைச் சேர்ந்த கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட சமையல்காரர்கள், தங்களது சமையல் திறமையால் சென்னையைக் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் இங்கு முகாமிட்டிருப்பது முக்கியமாக சென்னையில் தங்கி வேலை பார்த்து வரும் வட இந்திய சாப்டவேர் என்ஜீனியர்கள், மாணவர்களைக் குறி வைத்துத்தான்.

ஆனால் தற்போது சென்னைக்காரர்களும் கூட இவர்களின் கஸ்டமர்களாகி விட்டனர். காரணம், இவர்களது சுவையான சாப்பாடுதான்.

250க்கும் மேற்பட்டோர்

250க்கும் மேற்பட்டோர்

கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட பீகார் சமையல்காரர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனராம். இவர்கள் பல்வேறு பகுதிகளில் குழுவாக தங்கியுள்ளனர்.

வீடுகளுக்கு டோர்டெலிவரி

வீடுகளுக்கு டோர்டெலிவரி

இவர்கள் முதலில் வாடிக்கையாளர்களைப் பிடிக்கின்றனர். பின்னர் வாடிக்கையாளர்களின் இருப்பிடம் போய் சாப்பாட்டை கொடுக்கின்றனர். எல்லாமே டோர் டெலிவரிதான்.

வட இந்திய கஸ்டமர்கள்

வட இந்திய கஸ்டமர்கள்

வட இந்திய மாணவ, மாணவியர்,சாப்டவேர் என்ஜீனியர்கள்தான் இவர்களின் முக்கியமான வாடிக்கையாளர்கள் ஆவர்.

சப்பாத்தி - விதம் விதமான சாப்பாடு

சப்பாத்தி - விதம் விதமான சாப்பாடு

இவர்கள் சப்பாத்தி உள்ளிட்ட விதம் விதமான சாப்பாடு வகைகளை சமைத்துக் கொடுக்கின்றனர். சும்மா சொல்லக் கூடாது, நல்ல டேஸ்ட்டாகவே இருக்கிறது சாப்பாடு.

தாம்பரம்.. வேளச்சேரி.. கேளம்பாக்கம்..

தாம்பரம்.. வேளச்சேரி.. கேளம்பாக்கம்..

இந்த பீகாரிகள் ஐடி ஹப் எனப்படும் வேளச்சேரி, கேளம்பாக்கம், கொட்டிவாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலை, தாம்பரம், கிழக்குத் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு சமைக்கிறார்கள்.

மனீஷ் என்கிற கார்கில்

மனீஷ் என்கிற கார்கில்

21 வயதான மனீஷ் என்கிற கார்கில் பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்தவர். கார்கில் போரின்போது வேலைதேடி சென்னை வந்தார்.இதனால் அவருக்கு கார்கில் என்ற செல்லப் பெயராம். இவர் கூரியர் கம்பெனியில் முதலில் வேலை பார்த்தார். தேசபக்தி ஜாஸ்தி உடையவர். இப்போது சமையலராக மாறியுள்ளார்.

சப்பாத்தியும் சோக்காவும்

சப்பாத்தியும் சோக்காவும்

தனது சமையல்முறை குறித்து கார்கில் கூறுகையில், நாங்கள் சப்பாத்தி, சோக்கா - அதாவது வெங்காயம், கொத்தமல்லி, எலுமிச்சம்சாறு மற்றும் உருளைக்கிழங்கு, மிளகாய்ப் பொடி கலந்த கலவை- ஆகியவற்றை தினசரி சமைப்போம். நான் கோழிக்கறி சமைப்பதில் எக்ஸ்பர்ட் என்றார்.

சமையல் நேரம்

சமையல் நேரம்

இவர்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும்,பின்னர் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் வேலை பார்க்கிறார்கள்.

சென்னைவாசிகளும் ரசிகர்கள்

சென்னைவாசிகளும் ரசிகர்கள்

இவர்களின் சாப்பாட்டுக்கு வட இந்தியர்கள் மட்டுமல்ல,சென்னைவாசிகளும் கூட வாடிக்கையாளர்களாகியுள்ளனர்.காரணம்,இந்த சாப்பாட்டின் ருசியும்,பீகாரிகளின் கைப்பக்குவமும்.

ஜெய்ஹிந்த்..தம்பி ரெண்டு சப்பாத்தி போடுப்பா...!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+