செனகல் நாட்டு மதரஸாவில் தீ விபத்து: 9 குழந்தைகள் உடல் கருகி பலி
தாக்கார்: செனகல் தலைநகர் தாக்காருக்கு அருகில் உள்ள மெதினா மாவட்டத்தில் இருக்கும் இஸ்லாமிய மத போதனை பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 குழந்தைகள் உடல் கருகி பலியாகினர்.
செனகல் தலைநகர் தாக்காருக்கு அருகில் உள்ளது மெதினா மவாட்டம். அங்கு இஸ்லாமிய மத போதனைகளை பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியில் படிக்கும் 6 முதல் 12 வயது வரை உள்ள 45 குழந்தைகள் மரச் சுவர்கள் மற்றும் ஜின்க் தகடு போட்ட அறையில் நேற்று முன்தினம் இரவு தூங்கினர்.
அப்போது திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளில் 9 பேர் உடல் கருகி பலியாகினர். மெழுகுவர்த்தியால் தான் தீ பிடித்திருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. பள்ளி இருந்த இடத்திற்கு செல்லும் வழி மிகவும் குறுகியது என்பதால் தீயணைப்பு வண்டிகள் உடனே சம்பவ இடத்தை அடைய முடியவில்லை.
அதிபர் மேக்கி சால் சம்பவ இடத்திற்கு நேற்று சென்று பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications