பிரதிபா காவேரி கப்பல் உரிமையாளர்கள் இருவர் கைது
Subscribe to Oneindia Tamil

கடந்த அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வங்கக் கடலில் உருவான நீலம் புயலின் காரணமாக பலத்த காற்று வீசியது. இதில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை அருகே பிரதீபா காவேரி என்ற எண்ணெய்க் கப்பல் தரை தட்டியது.
அப்போது கப்பலில் இருந்து கடலில் குதித்த பணியாளர்கள் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து சாஸ்திரி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் எண்ணெய்க்கப்பல் பிரதீபா காவேரியின் உரிமையாளர் சுனில் பவார் மற்றும் மதன் ஆகியோரை புனே போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடலில் குதித்து உயிரிழந்த கப்பல் பொறியாளரின் பெற்றோர் இரண்டு பேர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications