புறாவைப் படம் எடுப்பது போல பெண் குளிப்பதைப் படம் பிடித்த கொத்தனார் கைது
சேலம்: சேலம் அருகே வானில் பறந்த புறாக்களை படம் பிடிப்பது போல நடித்து, கீழே குளித்துக் கொண்டிருந்த பெண்ணைப் படம் பிடித்த கொத்தனாரைப் போலீஸார் கைது செய்தனர்.
சேலம் நல்லாம்பட்டியைச் சேர்ந்தவர் வசந்தா. 35 வயதான இவர் தனது வீ்டிற்கு வெளியே உள்ள குளியலறையில் குளித்துக கொண்டிருந்தார். அப்போது வசந்தா வீட்டுக்கு அருகே உள்ள வீட்டின் மாடியில் புருஷோத்தமன் என்ற 20 வயது வாலிபர் நின்றிருந்தார்.
கையில் கேமரா செல்போன் வைத்திருந்த அவர் வானில் பறந்த புறாக்களைப் படம் பிடிப்பது போல பாவ்லா காட்டியபடி காணப்பட்டார். பின்னர் அப்படியே நைசாக, வசந்தா குளிப்பதை படம் எடுக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த வசந்தா அலறி கூச்சல் போட்டார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து புருஷோத்தமனைப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் புருஷோத்தமனைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications