ஜம்மு காஷ்மீரில் தொடரும் ஊரடங்கு- - கிலானிக்கு வீட்டுக் காவல்!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானதால் பதற்றம் நீடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து முக்கிய நகரங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஹூரியத் தலைவர் கிலானி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் சில நாட்களுக்கு முன்பு போராட்டம் ஒன்றின் போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலியானார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்றும் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. பாரமுல்லா நகரில் நடைபெற்ற ஊர்வலத்தில் மக்கள் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தனியார் சிமெண்ட் ஆலையின் வாகனம் ஒன்றை வன்முறையாளர்கள் தீயிட்டுக் கொளுத்தினர்.
இதைத் தொடர்ந்து ஸ்ரீநகர், பாரமுல்லா, பந்திப்போரா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் போலீசார் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தனர். இந்த ஊரடங்கு உத்தரவு இன்றும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே டெல்லியிலிருந்து ஸ்ரீநகர் திரும்பிய ஹூரியத் தலைவர் கிலானி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications