டெல்லி டெசோ மாநாட்டிற்கு காங்கிரஸ் தலைவர்களை அனுப்பி வைத்த ராகுல் காந்தி

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி டெசோ அமைப்பு சார்பில் மாநாடு டெல்லியில் நடந்தது. இதற்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமை வகித்தார்.
மாநாட்டில் பேசிய ஸ்டாலின் கூறுகையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்ற நம்பிக்கையை டெசோ கருத்தரங்கு அளித்துள்ளது. இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பாக மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கலந்து கொண்டார். போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசு பாரபட்சமற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ள கோரிக்கை தான் பலரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
மேலும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தனது கருத்தை மிக வலிமையாக பதிவு செய்தார்.
ஆரம்பத்தில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதில் காங்கிரஸ் தலைமைக்கு மிகவும் தர்ம சங்கடம் இருந்ததாம். ஆனால் இந்த விவகாரத்தை வைத்து காங்கிரசிடம் இருந்து திமுக விலக ஆரம்பித்துள்ளதை சுட்டிக் காட்டிய பிறகே ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்களை அனுப்பி வைத்தாராம்.
கூடவே, இது தமிழக விவகாரம் என்பதால் தமிழக கட்சி தலைவர் ஞானதேசிகனையும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினாராம். இதையடுத்தே சோனியா முழு அனுமதி வழங்கினாராம்.
இதன்மூலம் திமுக விஷயத்தில் காங்கிரஸ் தரப்பு இறங்கி வருவது உறுதியாகியுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications