மதுரை பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு தந்த 2 ஆசிரியர்களுக்கு அடி-உதை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை குலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8, 9ம் வகுப்பு படிக்கும் இரு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ஆசிரியர்கள் இருவருக்கு அடி உதை விழுந்தது.

இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்து வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சில ஆசிரியர்களும் வந்திருந்தனர்.

இந்நிலையில் ஆசிரியர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வெளியே அழைத்துவந்தபோது, அங்கிருந்த வழக்கறிஞர்கள் சிலர் ஆவேசத்துடன் அவர்கள் மீது பாய்ந்து, திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து பொதுமக்கள் பலரும் ஓடி வந்து ஆசிரியர்களைத் தாக்கினர். இருவரும் தப்பி ஓட, அவர்களை ரோட்டிலேயே விரட்டி விரட்டி அடித்தனர்.

போலீசார் சுதாரிப்பதற்குள் இது நடந்து முடிந்துவிட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+