கடலூர் மணி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து இறந்து போன மணியின் குடும்பத்தாரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. சீமானின் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர். அவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடந்த 4ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வைகோவுடன் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.இ. சத்யா, கடலூர் மாவட்டச் செயலாளர் என்.இராமலிங்கம், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் க. சோமு, தேர்தல் பணிச் செயலாளர் ந. மனோகரன், நாகை மாவட்டப் பொறுப்பாளர் ஏ.எஸ். மோகன், கடலூர் ஒன்றியச் செயலாளர் குணசீலன் மற்றும் ஏ.கே. சேகர் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.












Click it and Unblock the Notifications