கடலூர் மணி குடும்பத்தினருக்கு வைகோ ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து இறந்து போன மணியின் குடும்பத்தாரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கடலூர் மாவட்டம் நல்லவாடு கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. சீமானின் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர். அவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடந்த 4ம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Vaiko visits Cuddalore Mani's family
இந்த நிலையில் இறந்து போன மணியின் வீட்டிற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை சென்றார். அவரது வீட்டில் இருந்த மணியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மணியின் மனைவி, 2 மகன்கள், 1 மகள், தாயார் உள்ளிட்ட உறவினர்களிடம் இரங்கல் தெரிவித்தார்.

வைகோவுடன் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.இ. சத்யா, கடலூர் மாவட்டச் செயலாளர் என்.இராமலிங்கம், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் க. சோமு, தேர்தல் பணிச் செயலாளர் ந. மனோகரன், நாகை மாவட்டப் பொறுப்பாளர் ஏ.எஸ். மோகன், கடலூர் ஒன்றியச் செயலாளர் குணசீலன் மற்றும் ஏ.கே. சேகர் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+