நல்லாட்சி அளித்தால் தவறுகளை மக்கள் மன்னிப்பார்கள்: மோடி

OFBJP "என்ற அமெரிக்காவில் வாழும் பாரதிய ஜனதா கட்சியின் நண்பர்கள்"அமைப்பினருக்காக வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் இன்று உரையாற்றினார். அவர் தமது உரையில், என்னைப் பொறுத்தவரையில் ஒரே இந்தியா- தலைசிறந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான் தாரக மந்திரம். மதச்சார்பின்மைக்கான விளக்கம் என்னவென்று கேட்டால் ‘முதலில் இந்தியா' மற்றவையெல்லாம் பிறகுதான். நாம் எதைச் செய்தாலும் இந்தியாவுக்கானதாகவே அது இருக்க வேண்டும். இந்தியாவை நாம் முன்னிறுத்தி செயல்பட்டால் மதச்சார்பின்மை இயல்பாகவே ரத்ததில் கலந்து விடும். நாம் எங்கு வசித்தாலும் நமது கலாச்சாரம், பாரம்பரியத்தை நினைவில் கொள்ள வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களால் ஆன அனைத்து வகையிலும் உதவ வேண்டும். இந்தியாவை பார்த்திராத இந்திய வம்சாவழி குழந்தைகள் தற்போது இந்தியாவில் சமூக சேவைகளில் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இது ஒரு நல்ல அம்சம்.
ஆசியாவின் கைகளில் 21-ம் நூற்றாண்டு
கடந்த 30 ஆண்டுகளாக 21-ம் நூற்றாண்டை எந்த நாடு தலைமை ஏற்று நடத்திச் செல்லும் என்ற கேள்வி இருந்து வருகிறது. 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவின் வசம் இருந்தது. நாம் காலனிநாடாக இருந்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். நாம் காலனித்துவ நாடாக இருந்ததால் அந்த வாய்ப்பு நம் கைகளில் இருந்து நழுவிப் போனது. 20-ம் நூற்றாண்டில் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டிருந்த நேரத்தில் மகாத்மா காந்தி தலைமையில் நாம் தேச விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்தோம். இப்போது இந்த 21-ம் நூற்றாண்டு ஆசியாவின் கைகளில் இருக்கிறது. வாஜ்பாய் நாட்டின் பிரதமராக இருந்த போது இந்தியாவால் சில விஷயங்களை செய்ய முடிந்தது. இந்தியா அணு ஆயுத சோதனையை நடத்தியது. இதன் மூலம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நமது நாட்டின் வல்லமை மீதான நம்பிக்கை புதுப்பிக்கப்பட்டது. அந்த நிலைமை நீடித்திருந்தால் இந்தியாவின் கைகளில் உலகம் இருந்திருக்கும். ஆனால் கடந்த 6-7 ஆண்டுகாலமாக அப்படி எதுவும் நடைபெறவில்லை.
நல்லாட்சி..ஒளிக் கீற்று
ஒரு அரசு சிறந்த முறையில், தன்னலமின்றி சேவையாற்றினால், ஆட்சியாளர்களின் தவறுகளை மக்கள் மன்னித்து விடுவார்கள். இந்தியாவில் இப்போது இருள் படர்ந்த ஆட்சி இருந்தபோதும், குஜராத் மாநிலம் அதில் நம்பிக்கை ஒளிக் கீற்றாக உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளை பொருளாதார நெருக்கடி பதம் பார்த்தது. ஆனால் குஜராத் மாநிலமோ ஒருபோதும் வளர்ச்சிப் பணிகளை நிறுத்திக் கொண்டதே இல்லை. குஜராத் மாநிலத்தை தொழில்துறையினர் விரும்பும் மாநிலமாக உருவாக்கினோம். அனைத்து பிரச்சனைகளுக்கும் வளர்சி ஒன்றே தீர்வாகும். இதை குஜராத் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. சட்டசபை தேர்தல் வெற்றி என்னுடையது அல்ல.. குஜராத் மக்களுடையது.
இன்றைய உலகம் குளோபல் வார்மிங் பற்றி பேசுகிறது. நமது வழிபாட்டு முறையே இயற்கை சார்ந்தது. விலங்குகள் சார்ந்ததாக இருக்கிறது. அதைக் கடைபிடித்தால் போதும். எலியும் பாம்பும் ஒரே இடத்தில் இருக்க முடியுமா? என்று கேட்கப்படுவது வழக்கம். இருக்க முடியும் என்கிறது ஆன்மீகம். சிவன் வீட்டில் பாம்பும் எலியும் இருக்கிறதே.. அனைவருக்கும் மகாசிவராத்திரி வாழ்த்துகள் என்றார் அவர்.
-
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications