சென்னை ரெளடி காக்காத்தோப்பு பாலாஜி துப்பாக்கி முனையில் கைது
சென்னை: சென்னையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த ரெளடி காக்காதோப்பு பாலாஜியை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக வடசென்னை பகுதியில் ரவுடிகள் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ரவுடிகள் பட்டியல் சேகரிக்கப்பட்டு அவர்களை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில், கடந்த பல ஆண்டுகளாக பூக்கடை முத்தியால் பேட்டை, ஏழுகிணறு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் மிரட்டி மாமூல் வசூலித்தல், வழிப்பறி, கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த ரெளடி காக்காத்தோப்பு பாலாஜியை பிடிக்க பூக்கடை உதவி கமிஷனர் குமார் மேற்பார்வையில் முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
தேவைப்பட்டால் இவனை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந் நிலையில் முத்தியால்பேட்டை பிடாரியார் கோவில் தெருவில் மணி என்பவரை மிரட்டி பணம் பறித்து விட்டு தப்பிச் சென்ற பாலாஜியை அதே பகுதியில் வைத்து துப்பாக்கி முனையில் போலீசார் மடக்கினர்.
பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவன் சிறையில் அடைக்கப்பட்டான். பாலாஜி மீது 50 வழக்குகள் உள்ளன.
லாரி அதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு தனது குற்றச் செயல்களை தொடங்கிய பாலாஜி 1989ம் ஆண்டு மாமூல் தர மறுத்ததால் சுதாகர் என்பவரை வெட்டிக் கொன்றான்.
கடந்த பல ஆண்டுகளாக வடசென்னை பகுதியில் பொது மக்களுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தான்.
-
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications