ஆரணியில் பரபரப்பு- டெசோ ஊர்வலத்தில் திமுக நிர்வாகி திடீரென தீக்குளிக்க முயற்சி!
Subscribe to Oneindia Tamil
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் டெசோ அமைப்பின் ஊர்வலத்தில் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் சாந்தகுமார் திடீரென தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி நகரத்தில் டெசோ அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். அப்போது காவல்துறை அவர்களை கைது செய்ய முயன்றது. எங்களை கைது செய்து அடக்குமுறையை காட்டும் அரசாங்கத்தை கண்டிக்கிறோம் என டெசோ அமைப்பின் ஊர்வலத்தில் கலந்துக்கொண்டவர்கள் முழக்கமிட்டனர். பெரும் களேபரத்துக்கு மத்தியில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அப்போது திருவண்ணாமலை மாவட்ட திமுக மாணவரணி மாவட்ட அமைப்பாளர் பி.எஸ் சாந்தகுமார் தீ குளிக்க முயன்றார். அதற்குள் அவரிடம்மிருந்த பெட்ரோல் கேனை பிடுங்கிய காவல்துறை அதிகாரிகள் தீ குளிக்கும் முயற்சியை தடுத்து அவரையும் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications