இத்தாலி தனது வாக்கை காப்பாற்றாவிட்டால் தூதரை வெளியேற்றுமா இந்தியா?

இதுகுறித்து அவர் லோக்சபாவில் பாஜக எழுப்பிய குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துப் பேசுகையில், இத்தாலிய அதிகாரிகள், இந்தியாவில் இரண்டு மீனவர்களைச் சுட்டுக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட இத்தாலிய வீரர்கள் இருவரையும் சொன்னபடி இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இதுதொடர்பாக அவர்கள் சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டும்.
ஆனால் இந்தியாவுக்கு அளித்த உறுதிமொழியை அப்படியே மீறும் வகையில் நடந்து கொண்டுள்ளது இத்தாலி. இது மிகவும் தவறானதாகும். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் எதையுமே ஏற்க முடியாது. இத்தாலி தனது சொல்லைக் காப்பாற்றாவிட்டால் அதற்கான விளைவுகளை அது சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்றார் மன்மோகன் சிங்.
முன்னதாக பாஜக உறுப்பினர்கள் பேசுகையில் இரண்டு இத்தாலி வீரர்களையும் காப்பாற்றுவதற்காக இத்தாலியுடன் சேர்ந்து இந்திய அரசு நாடகமாடியுள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது என்று குற்றம் சாட்டியது.
தூதரை வெளியேற்றுமா இந்தியா?
இதற்கிடையே, இத்தாலிக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவுக்கான இத்தாலி தூதரை நாட்டை விட்டு வெளியேற்றும் முடிவை இந்தியா எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலி தூதராக தற்போது டேணியல் மன்சினி இருக்கிறார். இத்தாலி தொடர்ந்து தனது நிலையில் பிடிவாதமாக இருந்தால் மன்சினியை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மன்சினிதான், உச்சநீதிமன்றத்தில், இரு கடற்படை வீரர்களையும் இத்தாலி தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க உத்தரவாதம் தருவதாக எழுதிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications