தாயாருக்கு மயக்க காபி கொடுத்து மகள் பலாத்காரம்.. மதுரை ஜங்ஷனில் அக்கிரமம்
மதுரை: நெல்லையிலிருந்து மதுரைக்கு சிகிச்சைக்காக வந்த மன நலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் மதுரை ரயில் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட செயல் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது
அந்தப் பெண்ணின் தாயாருக்கு காபியில் மயக்க மருந்தைக் கலந்து கொடுத்து விட்டு மர்ம வாலிபர் இந்த அக்கிரமத்தை நிகழ்த்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்தவர் ராதிகா. 30 வயதான இவர் மன நலம் பாதிக்கப்பட்டவர். சிகிச்சைக்காக தனது தாயாருடன் மதுரைக்கு வந்தார்.
அங்கு சிகிச்சை பெற்றபிறகு நேற்று இரவு ஊருக்கு செல்வதற்காக மதுரை ரயில் நிலையம் வந்தனர். அங்கு அவர்கள் அமர்ந்து இருந்தபோது ஒரு வாலிபர் ராதிகாவின் தாயாருடன் பேசி உள்ளார். அப்போது அவர் வாங்கி கொடுத்த காபியை தாயார் குடித்துள்ளார். சற்று நேionல் மயங்கி விட்டார்.
நீண்ட நேரத்திற்கு பிறகு கண் விழித்த அவர் மகளுடன் ரயில் ஏறி தென்காசி புறப்பட்டார். திருமங்கலம் அருகே ரயில் சென்றபோது ராதிகாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போது மகளிடம் விசாரித்தபோதுதான் அவளை ஒரு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்த வாலிபர் அதன் பிறகு ராதிகாவை தனியாக அழைத்து சென்று கற்பழித்து விட்டதாக தாய் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications