திகார் சிறையில் மீண்டும் ஒரு பரபரப்பு... 30 வயது பெண் கைதி தற்கொலை
Subscribe to Oneindia Tamil

அந்தக் கைதிக்கு வயது 30. விசாரணைக் கைதியாவார். இவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் இந்தப் பெண். எதற்காக இவர் தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை.
பெமண் கைதியின் தற்கொலையால் திகார் சிறையின் பாதுகாப்பு குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
சமீபத்தில்தான் டெல்லி பாலியல் பலாத்கார வழக்கின் முக்கியக் குற்றவாளியான ராம்சிங் தற்கொலை செய்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம். அவர் கொலை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், பெண் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications