7 புலிக் குட்டிகளுக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த ஜெ.
Subscribe to Oneindia Tamil

வண்டலூர் பூங்காவில் பிறந்த 7 புலிக் குட்டிகளுக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதில் நான்கு வெள்ளைப் புலிகள், 3 சாதாரண புலிகள்.
இந்தக் கோரிக்கையை ஏற்று இன்று முதல்வர் ஜெயலலிதா 7 குட்டிகளுக்கும் பெயர் சூட்டினார். நான்கு வெள்ளைப் புலிகளுக்கும் முறையே ஆர்திரேயா, காவேரி, சித்ரா, அர்ஜூனா என்று பெயர் சூட்டினார் ஜெயலலிதா.
அடுத்து சாதாரண புலிகள் மூன்றுக்கும் சித்ரா, நேத்ரா மற்றும் வித்யான என பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
புலிக்குட்டிகளுக்கு பெயர் சூட்டுவதற்காக ஜெயலலிதா வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நேரில் சென்றார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அதிமுகவினர் குவிந்ததால் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் அவதிக்குள்ளாகினர்.












Click it and Unblock the Notifications