Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மே மாதம் இலங்கை செல்கிறார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை!

Subscribe to Oneindia Tamil

Navi Pillay to visit Sri Lanka in May
ஜெனிவா: இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து நேரில் ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மே மாதம் அங்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கைக்கான நவநீதம் பிள்ளையின் பயணங்கள் ஏற்கெனவே இரு முறை ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இலங்கைக்கு எதிரான ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மே மாதம் இலங்கைக்கு நவநீதம் பிள்ளை செல்லக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்தப் பயணத்தின் போது இலங்கைக்கு கடுமையான அழுத்தங்கள் கொடுப்பதுடன் தொடர்ந்தும் கண்காணித்து அறிக்கை ஒன்றையும் நவநீதம் பிள்ளை வெளியிடுவார் என்றும் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+