சென்னையில் ஆளுநர் மாளிகை, இலங்கை தூதரகம், விமான நிலையம் முற்றுகை- ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழீழத் தனியரசு அமைக்க வலியுறுத்தி சென்னை நகரில் மாணவர்கள் நடத்திய திட்டமிட்ட போராட்டத்தால் போலீசார் திகைத்துப் போயினர். கிண்டி ஆளுநர் மாளிகை, நுங்கம்பாக்கம் இலங்கை தூதரகம், மீனம்பாக்கம் விமான நிலையம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் 3 அணிகளாக பிரிந்து முற்றுகைப் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் உள்ள 25 கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தில் ஒன்று திரண்டு முழக்கங்களை எழுப்பியவாறு ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி கைது செய்தனர். இதனால் தென் சென்னை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Students across Tamil Nadu join anti-Lanka stir

இதே நேரத்தில் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை மாணவர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த இரண்டு போராட்டங்களைத் தொடர்ந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தையும் 500 மாணவர்கள் முற்றுகையிட முயன்றனர். அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுவரை கல்லூரி வளாகங்களுக்குள் போராட்டம் நடத்திய மாணவர்கள் தற்போது வீதிக்கு வந்து அணி அணியாக கைதாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+