நாடாளுமன்ற இரு சபைகளையும் முடக்கியது ஈழத் தமிழர் விவகாரம்!
டெல்லி: நாடாளுமன்றத்தின் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் நடவடிக்கைகளை ஈழத் தமிழர் விவகாரம் இன்று முடக்கிப் போட்டது.
லோக்சபாவில் காலையில் சபை கூடிய போது இரங்கல் தீர்மானங்களை சபாநாயகர் மீரா குமார் வாசித்தார். அப்போது திமுக, அதிமுக உறுப்பினர்கள் எழுந்து கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு இலங்கை விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தினர். அதிமுக, திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள், சர்வதேச நீதிமன்றம் முன்பு போர்க் குற்றவாளி ராஜபக்சேவை நிறுத்த வேண்டும்' என்பதை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியிருந்தனர். ஐநாவில் இந்தியாவின் துரோகத்தை கண்டிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் சிலரும் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
இதனால் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் சபை மீண்டும் கூடிய போது இலங்கை இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்று அதிமுகவின் தம்பித்துரையும் இந்தியாவுக்கு அளித்த உறுதிமொழிகளை இலங்கை மீறிவிட்டது என்று திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவனும் பேசினர். அப்போது பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா எழுந்து மத்திய அரசின் பெரும்பான்மை பலம் குறித்து கேள்வி எழுப்ப கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து சபை நடவடிக்கைகள் பிற்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டன.
இதேபோல் ராஜ்யசபாவிலும் திமுக, அதிமுகவினர் ஈழத் தமிழர் பிரச்சனையை விவாதிக்க வலியுறுத்தனர். இதனால் ராஜ்யசபாவின் நடவடிக்கையும் முடங்கியது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications