கோவாவில் இருந்து மும்பை சென்ற பஸ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 37 பேர் பலி
மும்பை: கோவாவில் இருந்து மும்பை சென்ற பேருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆறு ஒன்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 37 பேர் பலியாகியுள்ளனர்.
கோவாவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து ஒன்று மும்பைக்கு சென்றது. அந்த பேருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள கேத் சந்திப்பு அருகே உள்ள ஜக்புதி பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து நிலை தடுமாறி பாலத்தில் இருந்து ஜக்புதி ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 37 பேர் பலியாகினர். 17 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள கேத் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மீட்பு பணி முடிந்துவிட்டதாகவும், அந்த வழியில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் ஓட்டினாரா என்பதை அறிய அவர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications