இலங்கை தொடர்பாக தீர்மானம் கொண்டு வரத் தயார்: கமல்நாத்

Subscribe to Oneindia Tamil

Willing to discuss SL resolution says Kamal Nath in LS
டெல்லி: இலங்கை விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், (திமுக தலைவர் கருணாநிதி கோரியபடி) இலங்கை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

லோக்சபாவில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் இலங்கை விவகாரத்தை எழுப்பினர். திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன் பேசும் போது, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை பற்றி கவலை இல்லை. இலங்கை அரசால் அளிக்கப்பட்ட உறுதி மொழிகள் நிறைவேற்றப்பட்டதா? என்பதற்கான பொறுப்பும் கடமையும் இந்தியாவுக்கு இருக்கிறது. ஆனால் மத்திய அரசு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர், டி.கே.எஸ். இளங்கோவனை நோக்கி, நீங்கள் ஆளும் கட்சியா? எதிர்க்கட்சியா? என்று முழக்கங்களை எழுப்பி கூச்சலிட்டனர்.

பின்னர் பேசிய அமைச்சர் கமல்நாத், இலங்கையில் நடைபெற்று வரும் சம்பவங்கள் கவலைக்குரியதாக இருக்கிறது. இதைப் பற்றி வெளிப்படையான விவாதத்துக்கு அரசு தயாராக இருக்கிறது.

மேலும் இலங்கை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம். இதற்கான நேரத்தையும் நாளையும் சபாநாயகர் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

கமல்நாத் கூறியது போல் ஒரு விவாதம் நடத்தப்பட்டு அதிலே இலங்கைக்கு எதிரான ஒரு கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டால் திமுக சமாதானாமாகிவிடும். கருணாநிதி சுட்டிக்காட்டியிருப்பது போல மீண்டும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் திமுக நீடிக்க வாய்ப்பிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+