புத்த பிச்சுக்கள் மீது தாக்குதல்: சிங்களர்கள் தமிழகம் செல்ல தடை விதிக்க இலங்கை அரசு திட்டம்
கொழும்பு: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வலுத்து வருகிறது. மேலும் தமிழகம் வநத் 2 புத்த துறவிகள் தாக்கப்பட்டனர். இதனால் சிங்களர்கள் தமிழகத்திற்கு சுற்றுலா செல்ல தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும், இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் குறித்து சுதந்திர விசாரணை நடத்தக் கோரியும் தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில் இலங்கையில் இருந்து தமிழகம் வந்த 2 புத்த துறவிகள் தாக்கப்பட்டனர். மேலும் சில சிங்கள சுற்றுலாப் பயணிகள் மாநிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து இலங்கை மக்கள் தமிழ்நாட்டிற்கு சுற்றுலா செல்ல தடை விதிப்பது குறித்து ராஜபக்சே அரசு ஆலோசனை நடத்தி வருகின்றது. இந்த தகவலை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக செயலாளர் கருணாதிலக் அமுனுகமா தெரிவித்தார். தமிழ் உணர்வாளர்களின் செயல்களால் இலங்கை மக்களின் பாதுக்பாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இலங்கையில் இருந்து தமிழகம் செல்பவர்களின் பாதுகாப்பை இரு நாட்டு அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும். இலங்கை மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால் இரு நாட்டு உறவில் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதே விஷயத்தை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இமெயில் அனுப்பியுள்ளார். கடந்த ஆண்டும் தமிழகம் வந்த இலங்கை மக்கள் தாக்கப்பட்டனர். அப்போது இலங்கை மக்கள் தமிழகம் செல்ல அந்நாட்டு அரசு தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications