காங்கிரசுக்கு 'குட்பை': பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி திமுகவினர் கொண்டாட்டம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும், மத்திய அரசில் இருந்தும் திமுக விலகுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை அறிவித்தார். இதையடுத்து தங்கள் கட்சி எம்.பி.க்கள் இன்று அல்லது நாளை தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கூட்டணி நீண்ட காலமாக இருந்த திமுக வெளியேறியுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் இந்த செய்தி அறிந்த திமுகவினர் சென்னை அண்ணா அறிவாலயம் முன்பு திரண்டனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் திமுக மத்திய அரசில் இருந்து வெளியேறியதை உற்சாகமாக கொண்டாடினர்.
செங்கோட்டையில் திமுகவினர் நகரச் செயலாளர் ரஹீம், மாநில பேச்சாளர் சாட்டையடி சக்திவேல், பரமசிவம், வெங்கடேசன், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்துக் கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியதோடு கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications