அமளி துமளிக்கிடையே தன்னை செல்போனில் போட்டோ எடுத்த காங்கிரஸ் எம்.பி.யை மிரட்டிய ஜெயா பச்சன்
டெல்லி: ராஜய்சபாவில் அமளி நடந்து கொண்டிருக்கையில் தன்னை செல்போனில் படம் பிடித்த காங்கிரஸ் எம்.பி. பிரதீப் குமார் பால்முச்சுவை சமாஜ்வாடி எம்.பி. ஜெயா பச்சன் மிரட்டியுள்ளார்.
ராஜ்யசபாவில் நேற்று பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக திமுக, அதிமுக மற்றும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அந்த நேரம் காங்கிரஸ் எம்.பி. பிரதீப் குமார் பால்முச்சு சமாஜ்வாடி எம்.பி.யும் நடிகையுமான ஜெயா பச்சனை தனது செல்போனில் போட்டோ எடுத்துள்ளார். இதை ஜெயா பச்சன் பார்த்துவிட்டார்.
பிற்பகல் 2 மணிக்கு பிறகு சபாநாயகர் ரேணுகா சவுத்ரி அவையை ஒத்தி வைத்த உடன் ஜெயா இது குறித்து சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதன் பிறகு பிரதீப் அந்த போட்டோவை அழித்துள்ளார்.
காங்கிரஸ் உறுப்பினர் அம்பிகா சோனியின் தலையீட்டுக்குப் பிறகு பிரதீப் ஜெயா பச்சனிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கு ஜெயா, இதற்கான விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications