ஜாமீன் வழங்க யாரும் இல்லை… 73 கைதிகளை விடுதலை செய்தது சென்னை ஹைகோர்ட்
சென்னை: நீதிமன்றம் ஜாமின் வழங்கியும் உத்தரவாதம் அளிக்க யாரும் முன்வராமல் சிறையில் வாடும் 73 விசாரணை கைதிகளை விடுதலை செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சிறைகளில் ஏராளமான விசாரணைக் கைதிகள் உள்ளனர். இவர்களில் ஆண்டுக்கணக்கில் கூட தங்களின் வாழ்நாளை சிறையில் கழித்து வருகின்றனர். இவர்களுக்கு நீதிமன்றம் சார்பில் ஜாமீன் வழங்கினாலும் கூட உத்தரவாதம் தர யாரும் முன்வருவதில்லை.
இதேபோல விசாரணைக்காக சிறையில் அடைக்கப்பட்ட வீரராஜூ என்பவருக்கு ஜாமின் வழங்க யாரும் முன்வராததால் அவர் சட்டத்திற்கு புறம்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே வீரராஜூவை விடுதலை செய்யக் கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் எலிப்பி தர்மாராவ், எம்.வேணுகோபால் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இவ்வகையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகள் தொடர்பான விபரங்களை சேகரிக்கும்படி சட்ட உதவி குழுவினருக்கு உத்தரவிட்டது.
அவர்கள் சேகரித்த தகவலின் படி ஜாமின் வழங்கியும் உத்தரவாதம் அளிக்க யாரும் முன்வராத 272 விசாரணை கைதிகள் விடுதலை செய்யப்படாமல் உள்ளது தெரிய வந்தது.
இவர்களைப் பற்றிய வழக்கு கோப்புகளை ஆய்வு செய்த நீதிபதிகள், வழக்குகளின் தன்மைக்கேற்ப, 73 கைதிகளை சொந்த ஜாமினில் விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
மீதமுள்ள 199 கைதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு கடுமையாக இருப்பதாலும், அவர்களின் பழைய குற்றப் பின்னணியை கருத்தில் கொண்டும் விடுதலை செய்யப்படவில்லை.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications