சஞ்சய்தத்துக்கு ஜெயா பச்சன் ஆதரவு- ஆளுநரை சந்தித்து வலியுறுத்த முடிவு!
Subscribe to Oneindia Tamil

1993ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. சஞ்சய் தத்துக்கு ஆதரவாக அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜெயா பச்சன், அவர் ஏற்கெனவே போதுமான தண்டனையை அனுபவித்துவிட்டார். கடந்த 20 ஆண்டுகால வாழ்க்கை என்பது ஒரு ஆயுள் தண்டனை போல்தான். அவர் 20 ஆண்டுகாலமாக தண்டனையை அனுபவித்து வருகிறார். அவருக்கு மன்னிப்பு அளித்து தண்டனையிலிருந்து அவரை விடுவிக்க மகாராஷ்டிரா மாநில ஆளுநரை தனிப்பட்ட முறையில் சந்திக்கப் போகிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications