34 வயது 'குழந்தை'...சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு கொடுக்கலாம்..: திக்விஜய்சிங் ஆதரவு

சஞ்சய் தத்துக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நடிகர் ரஜினிகாந்த், ஜெயா பச்சன் என பலரும் அவரை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங்கும் அதிரடியாக சஞ்சய் தத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், சஞ்சய் தத் ஒரு குற்றவாளி அல்ல. அவர் ஒரு தீவிரவாதியும் அல்ல.1993-ம் ஆண்டு ஒரு மோசமான நிலைமை இருந்தது. அப்போது அவருக்கு இளம் வயது. குழந்தைகள் எப்படி சில நேரங்களில் செயல்படுவார்களோ அது போல் அவர் செயல்பட்டிருக்கிறார் (சஞ்சய் தத் கைது செய்யப்பட்ட போது அவருக்கு 34 வயது என்பது குறிப்பிடத்தக்கது). அவர் ஒரு தவறு செய்துவிட்டார். அதற்கான விலையாக 18 மாத சிறைத் தண்டனையும் அனுபவித்துவிட்டார். கடந்த காலங்களில் மதவாதத்துக்கு எதிராகவும் சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும் அவர் கருத்து தெரிவித்ததாலேயே அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்கின்றனர் சிலர் என்றார் அவர்.
இது பற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ரஷீத் ஆல்வி கூறுகையில், சஞ்சய் தத் கருணை மனு தாக்கல் செய்யலாம். அதை ஜனாதிபதி பரிசீலனை செய்யலாம்.. இது பற்றியெல்லாம் கருத்து சொல்ல முடியாது என்றார்.











Click it and Unblock the Notifications