கொல்கத்தா பேருந்தில் தென் கொரிய மாணவிக்கு பாலியல் தொந்தரவு- ஒருவர் கைது
கொல்கத்தா: மத்திய கொல்கத்தாவில் இன்று காலை பேருந்தில் சென்ற தென் கொரிய மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம் மத்திய கொல்கத்தாவில் படிக்கும் 23 வயது தென்கொரிய மாணவி இன்று காலை 7.30 மணிக்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் இருந்த ஒருவர் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த மாணவி நடந்தது குறித்து போக்குவரத்து போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
அவர்கள் பேருந்தில் பயணித்த சில ஆண்களை பிடித்து அடையாளம் காட்டுமாறு கூறினர். அந்த மாணவி அடையாளம் காட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த வாரம் உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இங்கிலாந்து பெண் தனது கற்பை காத்துக் கொள்ள பால்கனியில் இருந்து கீழே குதித்தார். இந்நிலையில் கொல்கத்தாவில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications