ஈரோட்டில் பிஸ்கட், சாக்லேட் கொடுத்து 6ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த பட்டதாரி வாலிபர்
ஈரோடு: ஈரோட்டில் 12 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்ததாக பட்டதாரி வாலிபர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர் ரமேஷ். கூலித் தொழிலாளி. அவரது மகள் யமுனா(12)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த வாரம் யமுனா ஈரோட்டில் உள்ள சூரம்பட்டியில் இருக்கும் தனது சித்தி வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் சித்தி வெளியே செல்ல யமுனா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விஜி(20) என்ற பட்டதாரி வாலிபர் பிஸ்கட், சாக்லேட் வாங்கிக் கொடுத்து யமுனாவை வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.
ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள முள்ளுக்காட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்ற அவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அவரது பெற்றோர் யமுனாவுடன் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் தங்கள் மகளுக்கு நேர்ந்தது குறித்து புகார் கொடுத்தனர். அவர்களின் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications