மேற்கு வங்க தொழில்துறையினருடன் ஏப்ரல் 9-ல் மோடி சந்திப்பு!!

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியே முன்னிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை இதர மாநிலங்களின் தொழில்துறையினர் ஒரு முன்மாதிரியாக கருதி அவரது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முனைகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் கடந்த 2008ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தின் நானோ தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் விவகாரம் பெரும் போராட்டமாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து சிங்கூரில் இருந்து குஜராத் மாநிலம் சனானந்த் மாவட்டத்துக்கு டாடா நிறுவனம் இடம் பெயர்ந்தது. அண்மையில் ஹால்டியா பல்க் டெர்மினல் நிறுவனம் மேற்கு வங்க அரசின் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் தாம் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்றும் கூறியிருந்தது
இந்நிலையில் மேற்கு வங்க தொழில்துறையினர் ஏப்ரல் 9-ந் தேதியன்று கொல்கத்தாவில் நடத்தும் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளது. இக்கூட்டத்தில் மேற்கு வங்க தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர். குஜராத் முதல்வர் மோடியின் வருகையால் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து சில தொழிற்சாலைகள் குஜராத் மாநிலத்துக்கு இடம் பெயரலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications