பஞ்சாபில் பயங்கரம்: ஓடும் காரில் இளம்பெண் கற்பழிப்பு… தூக்கி வீசப்பட்ட கொடூரம்
அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 22 வயது இளம்பெண்ணை ஓடும் காரில் நான்கு பேர் கொண்ட கும்பல் நேற்று இரவு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான பெண் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வீடு திரும்புவதற்காக பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது காரில் வந்த இரண்டு பேர் தன்னை கடத்தினர். பின்னர் அக்காரில் மேலும் இரண்டு பேர் ஏறினர் என்று தெரிவித்துள்ளார்.
நான்கு மணிநேரமாக நகருக்குள் காரில் வலம் வந்த அவர்கள் தன்னுடைய அலரல் சத்தம் வெளியே கேட்கக் கூடாது என்பதற்காக அதிக சவுண்ட் வைத்து பாட்டு போட்டுக் கொண்டு பலாத்காரம் செய்தனர். பின்னர் தன்னை நகரின் பாதுகாப்பு படை பிரிவினர் முகாம் அருகில் காரில் இருந்து தூக்கி வீசிவிட்டனர் என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.
சாலையில் சென்ற நபர்கள் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமிர்தசரஸ் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.
டெல்லியில் ஓடும்பேருந்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு பின் நாடு முழுவதும் அதிக அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து தண்டனையை அதிகமாக்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனினும் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.












Click it and Unblock the Notifications