நாளை +2 தேர்வு முடிகிறது, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு துவங்குகிறது: 10.6 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழு

பிளஸ் 2 தேர்வு கடந்த 1ம் தேதி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்வை 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதி வருகின்றனர். இத்தேர்வு நாளை முடிவடைகிறது. இந்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை துவங்கி வரும் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 10,68,838 மாணவ, மாணவியர் 3,012 மையங்களில் எழுதுகின்றனர். தேர்வு எழுதுவோரில் 5,43,152 பேர் மாணவர்கள், 5,25,686 பேர் மாணவிகள் ஆவர். பள்ளியில் படித்து தேர்வும் எழுதும் இவர்களைத் தவிர 50,000க்கும் மேற்பட்ட தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு காலை 10 மணிக்கு துவங்கி பிற்பகல் 12.45 வரை நடைபெறும். சரியாக காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். வினாத்தாளை வாசித்துப் பார்க்க 10 நிமிடம் வழங்கப்படும். இதையடுத்து விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய 5 நிமிடம் கொடுக்கப்படும். தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் தலைமை ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வினாத்தாள்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவை மாவட்ட கல்வி அதிகாரிகள் பொறுப்பில் உள்ளன. வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தேர்வு அட்டவணை
மார்ச் 27ம் தேதி - மொழித்தாள்-1
மார்ச் 28ம் தேதி - மொழித்தாள்-2
மார்ச் 29, 30, 31 ஆகிய தேதிகள் விடுமுறை
ஏப்ரல் 1ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2ம் தேதி - ஆங்கிலம் 2ம் தாள்
ஏப்ரல் 3, 4 ஆகிய தேதிகள் - தேர்வு இல்லை
ஏப்ரல் 5ம் தேதி - கணிதம்
ஏப்ரல் 6, 7 ஆகிய தேதிகள் - விடுமுறை
ஏப்ரல் 8ம் தேதி - அறிவியல்
ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகள் - தேர்வு இல்லை
ஏப்ரல் 12ம் தேதி - சமூக அறிவியல்












Click it and Unblock the Notifications