தேமுதிகவினர் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிப்பதை தடுக்கவே 6 மாத சஸ்பென்ட்: மு.க ஸ்டாலின்

தமிழக சட்டசபையில் இருந்து 6 தேமுதிக எம்.எல்.ஏக்கள் நேற்று ஓராண்டு காலத்துக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்து நேற்று தேமுதிக, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
இன்று சட்டசபையை தேமுதிக எம்.எல்.ஏக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர். ஆனால் இதர கட்சிகள் பங்கேற்று தேமுதிக எம்.எல்.ஏக்களின் தண்டனைக் காலத்தை குறைக்க வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அவர்களது தண்டனைக் காலம் 6 மாதமாகக் குறைக்கப்பட்டது.
இந்த 6 தண்டனையை மேலும் குறைக்க வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் இதை ஏற்கவில்லை. இதனால் திமுக எம்.எல்.ஏக்கள் மு.க. ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், ராஜ்யசபா தேர்தலில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பதைத் தடுக்கும் வகையில்தான் 6 மாத கால சஸ்பென்ட் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளதா என நாங்கள் சொல்லவில்லை.. செய்தியாளர்களாகிய நீங்கள் கேட்கிறீர்கள்... எங்களுக்கும் அது உண்மைதான் எனத் தோன்றுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications