கொலை மிரட்டல் வழக்கில் திவாகரன் ஜாமீன் மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

திவாகரன், ரிஷியூர் ஊராட்சித் தலைவர் கிருஷ்ணமேனன், ராஜேந்திரன் ஆகியோர் கொலை செய்ய முயன்றதாக ரிஷியூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் தமிழார்வன், நீடாமங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 22-ந் தேதி புகார் அளித்தார். இப்புகாரைத் தொடர்ந்து திவாகரன், கிருஷ்ணமேனன், ராஜேந்திரன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் மூவரும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி வழக்கறிஞர் மூலம் நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்ற நடுவர் முருகன், மூவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். அதே நேரத்தில் திவாகரனுக்கு சிறையில் முதல் வகுப்பு அளிக்கக் கோரிய மனுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications