வாட்ட ஆரம்பித்தது கோடை.. வடமாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்க நடவடிக்கையாம்!

Subscribe to Oneindia Tamil

Tamil Nadu to purchase power from Northern States
சென்னை: தமிழகத்தை வாட்டி வதைத்து வரும் மின் வெட்டுப் பிரச்சனை கோடை காலம் தொடங்கிவிட்டதையடுத்து மேலும் மோசமடைந்து வருகிறது. இதையடுத்து கோடையில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க வட மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கான நடவடிக்கையில் மின்சார வாரியம் இறங்கியுள்ளது.

தமிழகத்துக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 12,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், இதில் சுமார் 4,500 மெகாவாட் வரை பற்றாக்குறை நிலவுகிறது.

காற்றாலைகளால் கோடை காலத்தில் மிகக் குறைந்த அளவு மின்சாரமே உற்பத்தி செய்ய முடியும். இதனால் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கவுள்ளது.

மேலும் மத்திய தொகுப்பிலிருந்தும் தமிழகத்துக் போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் நேற்றைய நிலவரப்படி மொத்த மின் உற்பத்தியின் அளவு 8,888 மெகாவாட் என்ற அளவில் குறைந்துள்ளது.

மார்ச் மாதமே இந்த நிலை என்றால் அடுத்த இரு மாதங்களில் கோடை உச்சத்தை எட்டும் போது மக்களின் நிலையை கற்பனை செய்தாலே பயமாக உள்ளது.

இந் நிலையில் வட மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்க தமிழக அரசு ஆலோசித்து வருகிறதாம்.

எங்கிருந்து, எப்போது, எவ்வளவு மின்சாரம் வாங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு சில இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தமிழகத்திற்கு ஜூன் மாதத்திலிருந்து 2014 மே மாதம் வரை மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைக்கு, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் முறையான அனுமதி அளித்துள்ளது.

ஒரு யூனிட் ரூ.5க்கு வாங்கவும் அனுமதி வழங்கி உள்ளது. ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஒடிஸ்ஸா மாநிலங்களிலிருந்து இந்த மின்சாரம் வாங்கப்படலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+