சர்வதேச நிறுவனங்களை 'அலேக்' செய்யும் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள்

இந்த ஆண்டு சாப்ட்வேர்களுக்காக சர்வதேச அளவில் செலவிடப்படும் தொகையில் 9.8 சதவீதம், அதாவது ரூ. 3.8 லட்சம் கோடி, இந்திய நிறுவனங்களையே வந்து சேர உள்ளது.
இது கடந்த 2007ம் ஆண்டில் 4.8 சதவீதமாக, அதாவது ரூ. 1.5 லட்சம் கோடியாகவே இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் இது இரண்டு மடங்காகியுள்ளது.
மேலும் சர்வதேச சாப்ட்வேர் நிறுவனங்களுடன் ஒப்பிகையில் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதிகரித்தே வருகிறது.
2007ம் ஆண்டு சர்வதேச சந்தையில் ஐபிஎம், அக்சென்சர், எச்.பி, கேப்ஜெமினி, புஜிட்சு, சிஎஸ்சி, அடோஸ், லாஜிகா ஆகிய நிறுவனங்களின் பங்கு 92.3 சதவீதமாக இருந்தது. இது 2012ம் ஆண்டில் 85.7 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
அதே நேரத்தில் 2007ம் ஆண்டு சர்வதேச சந்தையில் இந்திய நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, காக்னிசன்ட், எச்சிஎல் ஆகியவற்றின் பங்கு 7.7 சதவீதமாக இருந்தது. இது 2012ம் ஆண்டில் 14.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தத் தகவல்களை ஏஞ்சல் புரோக்கிங் சர்வதேச நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பணியாளர்களின் ஊதியம் குறைவாக இருப்பதும், இளம் சாப்ட்வேர் என்ஜினியர்கள் தங்கு தடையின்றி கிடைத்து வருவதுமே இதற்கு முக்கியக் காரணம். சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இந்திய நிறுவனங்கள் 25 சதவீதம் வரை செலவைக் கட்டுப்படுத்த முடிவதாகவும் ஏஞ்சல் புரோக்கிங் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications