ஷாப்பிங் மாலை தாக்க வருபவர் மனைவி, குழந்தைகளோடு தான் வருவாரா? உமர் அப்துல்லா

டெல்லியில் உள்ள வணிக வளாகம் ஒன்றை தாக்கும் நோக்குடன் வந்ததாகக் கூறி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த லியாகத் அலி ஷா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
இந்தியாவில் தாக்குதல் நடத்த வரும் ஒருவர் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு தான் வருவாரா? வணிக வளாகத்தை தாக்க வரும் தீவிரவாதி ஒரு கையில் மனைவியையும், மறுகையில் குழந்தைகளையும் பிடித்துக் கொண்டு ஏதோ சுற்றுலா செல்வது போல இந்தியாவுக்கு வந்துள்ளார் என்பதை முதன்முறையாக கேட்கிறேன். தீவிரவாதிகள் தாக்க வருகையில் ஒரு கையில் துப்பாக்கியும், மறுகையில் வெடிகுண்டும் தான் வைத்திருப்பார்கள்.
இந்த விவகாரம் குறித்து தேசிய புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து டெல்லி மற்றும் காஷ்மீர் போலீசாரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. டெல்லி போலீசாரோ லியாகத் வணிக வளாகத்தை தாக்க வந்த தீவிரவாதி என்றனர். ஆனால் காஷ்மீர் போலீசாரோ அவர் சரணடைய வந்தவர் என்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications