அமெரிக்க ராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் விடுதலைப் புலிகளிடம் எப்படி வந்தது? இலங்கை அரசு
கொழும்பு: அமெரிக்க ராணுவத்தினர் பயன்படுத்தும் அதிநவீன ஆயுதங்கள் விடுதலைப் புலிகளின் கைகளுக்கு எப்படி வந்தது என்று இலங்கை அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
ஜ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது. நீர்த்துப் போன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கே இலங்கை அரசு ஆத்திரம் அடைந்து அதை ஏற்க மறுத்தது.
இந்நிலையில் இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 11 நாடுகள் ஆயுதங்கள் வழங்கியுள்ளன. இது தொடர்பான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. முள்ளி வாய்க்காலில் மீட்கப்பட்ட ரகசிய ஆவணங்களில் இந்த ஆயுத கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான ஆதாரங்கள் காணப்படுகின்றன.
அமெரிக்க படையினர் பயன்படுத்தும் எம்.16 ஆயுதங்களையும், சமிக்ஞை கருவிகளையும் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் கப்பல்கள் சர்வதேச கப்பல் நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தன. ராணுவத்தினருக்கு கிடைக்காத சில எந்திர சாதனங்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்தினர். எனவே, இந்த ஆதாரங்கள் சர்வதேச சமூகத்திற்கு சமர்ப்பிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட குமரன் பத்மநானை சாட்சியாக்கவும் திட்டமிட்டிருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
-
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
சமாதான பேச்சுவார்த்தைக்கு நடுவே வேலையை காட்டிய டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் -
அமெரிக்க போரில் மேஜர் திருப்பம்.. யுரேனியத்தை வழங்க ஈரான் ஒப்புதல்? பின்னணியில் நடப்பது என்ன? -
மிகப்பெரிய டவிஸ்ட்.. யுரேனியத்தை கைவிடும் ஈரான்.. அமெரிக்காவிடம் தாராளமாக விட்டுக் கொடுக்க முடிவு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை












Click it and Unblock the Notifications