மதுரை உதவி கலெக்டரின் கார் ஜப்தி
மதுரை: கோர்ட் உத்தரவின்படி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள், உதவி கலெக்டரின் வாகனத்தை ஜப்தி செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ஆத்திக்குளத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் மனைவி பிரேமா. வருக்கு சொந்தமாக 38 சென்ட் இடம் ஒத்தக்கடை அருகே உள்ள உலகநேரியில் இருந்தது. அந்த இடம் மதுரை உயர்நீதிமன்றக் கிளை கட்டும் போது, அரசால் கையக்கப்படுத்தப்பட்டது.
இதற்கு அரசு சார்பில் 67,750 ரூபாய் தருவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தொகை பிரேமாவுக்கு பல ஆண்டுகளாகக் கொடுக்கப்படவில்லை. இந்த தொகையை வழங்கக் கோரி மதுரை சார்பு நீதிமன்றத்தில் பிரேமா வழக்குத் தொடர்ந்தார்.
பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டும் பிரேமாவுக்கு அந்த தொகை வழங்கப்படவிலலை. இதைத் தொடர்ந்து மதுரை ஆர்டிஓ அலுவலகத்தில் உள்ள வாகனம் மற்றும் பொருட்களை ஜப்தி செய்து பிரேமாவுக்கு உரிய தொகையை வழங்க சார்பு மாஜிஸ்திரேட் யக்குமார் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து பிரேமாவும் அவரது வழக்குரைஞர்கள் மற்றும் சார்பு நீதிமன்ற அமீனா ஆகியோர் இன்று காலை மதுரை ஆட்சியர் அலவலக வளாகத்துக்கு கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உதவி ஆட்சியர் பயிற்சிக்கு உரிய வாகனத்தை ஜப்தி செய்தனர்.












Click it and Unblock the Notifications