Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏப்ரல் முதல் கூடங்குளம் முதல் அணு உலை இயங்கும்: புதினுக்கு மன்மோகன் உறுதி

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh
டர்பன்: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் உலை வரும் ஏப்ரல் மாதம் முதல் செயல்படத் துவங்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் டர்பன் சென்றுள்ளார். அங்கு அவர் நேற்றிரவு ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் புதினிடம் கூறுகையில்,

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலை ஏப்ரல் மாதம் முதல் செயல்படத் துவங்கும் என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். 3 மற்றும் 4வது உலைகள் அமைக்க பல்வேறு அனுமதிகள் பெறும் பணிகள் நடந்து வருகின்றன என்றார்.

இந்த சந்திப்பின்போது பிரதமருடன் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்ளிட்டோர் இருந்தனர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வேண்டும் என்று வலியுறுத்தி மக்கள் போராடி வரும் நிலையில் பிரதமரின் அறிவிப்பு அவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+