ஈஸ்டர்.. தமிழகமெங்கும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை, உற்சாக கொண்டாட்டம்
சென்னை: இயேசுநாதர் உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. வாடிகன் சிட்டியில் புதிய போப்பாண்டவர் சிறப்பு்ப் பிரார்த்தனையில் பங்கேற்றார்.
இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்தார் என்று பைபிள் கூறுகிறது. இந்த உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
இன்று ஈஸ்டராகும். இதையொட்டி உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர். தமிழகத்திலும் ஈஸ்டர் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நேற்று நள்ளிரவு பாஸ்கர் திரு விழிப்பு திருப்பலி நடந்தது. அதிகாலை கிறிஸ்துவர்கள் மெழுகு வர்த்திகளை கையில் ஏந்தியப்படி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
ஏசு உயிர் எழுந்த நிகழ்வுகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு நடத்தி காட்டப்பட்டது. அதை தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆராதனையும் நடந்தது. இதில் அனைவருக்கும் திவ்ய ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு பிரார்த்தனையில் வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் இன்று அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ், மலையாளம், கொங்கனி, தெலுங்கு, ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடை பெறுகிறது.
இதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளிலும், சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்திலும் ஈஸ்டர் கொண்டாடப்பட்டது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications