ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்கிங் சென்ற போது படுகொலை: புதுக்கோட்டையில் பதற்றம்
புதுக்கோட்டை: வாக்கிங் சென்ற ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் படுகொலை செய்யப்பட்டதால் புதுக்கோட்டை அருகே பரபரப்பு நிலவுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சாந்தி. இவரது கணவர் குமார் . இவரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தான்.
குமார் நடைபயிற்சிக்காக இன்று (31.03.2013) காலை 5.30 மணிக்கு ஏம்பல் சாலையில் சென்றுள்ளார். கடை வீதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று கொண்டிருந்த போது, அங்கு காத்திருந்த ஒரு மர்ம கும்பலால் குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள் கொலையாளிகளை பிடிக்கக் கோ ரி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர்மாவட்ட எஸ்.பி. தமிழ்சந்திரன் கொலையாளிகளை பிடிப்பதாக உத்திரவாதம் அளித்ததையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
குமாரின் உடல் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications