ஆங்கிலம் படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்: சசி தரூர்

Subscribe to Oneindia Tamil

shashi tharoor
திருவனந்தபுரம்: நவீன உலகில் ஆங்கிலம் படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று திருச்சூரில் நடந்த ஆங்கில மொழி தொடர்பான சர்வதேச கருத்தரங்கில் மத்திய அமைச்சர் சசி தரூர் பேசியது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூரில் பள்ளிகளில் ஆங்கில மொழி பயிற்றுவிப்பது தொடர்பான 3 நாள் சர்வதேச கருத்தரங்கு நேற்று துவங்கியது.

இந்த கருத்தரங்கை மத்திய அமைச்சர் சசி தரூர் தொடங்கி வைத்து பேசியதாவது,

மிக வேகமாக மாறி வரும் இந்த நவீன உலகில் மலையாளிகள் ஆங்கிலம் படிப்பது மிக முக்கியமாகும். ஆங்கில மொழி படிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டால் அது அந்த மாணவரின் எதிர்காலத்தை தகர்ப்பதற்கு சமமானதாகும். ஆங்கிலம் படித்தால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும்.

ஆங்கிலத்தை படிப்பது போலவே மலையாள மொழியையும் படிக்க வேண்டும். முதல் மொழியாக மலையாளத்தையும், 2வது மொழியாக ஆங்கிலத்தையும் படிக்க வேண்டும். ஆங்கிலம் படிப்பது பொருளாதார, சமூக, கல்வி முன்னேற்றத்திற்கு மிக அவசியமாகும். கேரளாவில் அனைவருக்கும் போதிய வேலை வாய்ப்பு கிடையாது. எனவே வேலை தேடி பலரும் பல மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் செல்கின்றனர். இவ்வாறு பல்வேறு பகுதிகளுககு செல்லும் மலையாளிகள் ஆங்கில மொழியை தெரிந்து வைத்திருப்பது மிகுந்த பயனை அளிக்கும் என்றார்.

அவர் ஆங்கில மொழியை புகழ்ந்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+