இன்று முதல் உயர்ந்தது ரயில் கட்டணம், சரக்குக் கட்டணம்

Subscribe to Oneindia Tamil

Train
டெல்லி: ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட படி இன்றுமுதல் ரயில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்குக் கட்டணம் உயர்ந்துள்ளது. நேற்று நள்ளிரவு முதலே இந்த கட்டண உயர்வுகள் அமலுக்கு வந்தன.

அனைத்து வகையான சரக்குகளுக்கும் 5.7 சதவீத உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இந்த உயர்வுகள் மூ்லம் பயணிகள் வருவாயில் ரூ. 42,210 கோடியும், சரக்குகள் வருவாய் மூலம் ரூ. 93,554 கோடியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகள் கட்டணத்தைப் பொறுத்தவரை அடிப்படைக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அதேசமயம் தத்கல் கட்டணம், ரிசர்வேஷன் கட்டணம் உள்ளிட்டவை உயர்ந்துள்ளது. மேலும் டிக்கெட் ரத்துக்கான பிடித்த விகிதமும் உயர்ந்துள்ளது.

தத்கல் கட்டணம் 2ம் வகுப்புக்கு 10 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏசி மற்றும் பிற வகுப்புகளுக்கு 30 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

டிக்கெட் ரத்துக்கான பிடித்தக் கட்டணம் ரூ. 10லிருந்து ரூ. 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 11,000 ரயில்கள் ஓடுகின்றன. அதில் தினந்தோறும் 2 கோடி பேர் பயணிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிசர்வேஷன் கட்டணத்தைப் பொறுத்தவரை 2ம்வகுப்புக்கான ரிசர்வேஷன் கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஏசி வகுப்புகளுக்கு ரூ. 15லிருந்து ரூ. 25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சூப்பர் பாஸ்ட் ரயில்களில், தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளுக்கு ரிசர்வேஷன் கட்டணம் ரூ. 10 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏசி வகுப்புக்கு இது ரூ. 15 முதல் ரூ. 25 வரை அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+