கேரளா: இரு 4ம் வகுப்பு மாணவிகளை தொடர்ந்து பலாத்காரம் செய்த இரட்டையர்கள் கைது
கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே 4ம் வகுப்பு படித்து வரும் இரு மாணவிகளை, இரட்டை சகோதரர்கள் பலவேறு நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் 42 வயதான முகம்மது பஷீர் மற்றும் முகம்மது அலி. இருவரும் இரட்டையர்கள். இதில் பஷீர் ஆட்டோ டிரைவர், அலி கறிக்கடை வைத்திருக்கிறார்.
இந்த இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த நான்காம் வகுப்பு படித்து வரும் இரு மாணவிகளை ஆசை வலையில் வீழ்த்தி பல நாட்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளனர். பஷீரின் ஆட்டோவிலும், அலியின் கறிக்கடையிலுமாக இந்த அக்கிரமம் தொடர்ந்துள்ளது.
அவர்களிடம் சிக்கி அந்த இரு மாணவிகளும் தவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், தங்களது வகுப்பு ஆசிரியைகளிடம் இரு மாணவிகளும் தங்களுக்கு நேர்ந்த கதியைக் கூறி அழுதுள்ளனர். இதையடுத்து அவர்கள் போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரட்டையர்களைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications