'இந்தியா இருக்கும் வரை காங்கிரஸும் இருக்கும்' என்றார் காந்தி: ஜெ.வுக்கு குமரி அனந்தன் பதிலடி
சென்னை: இந்தியா வாழும் வரை காங்கிரஸ் கட்சியும் இருக்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காந்தி பேரவையின் தலைவருமான குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்டசபையில் நடைபெற்ற விவாதத்தில், ‘‘காங்கிரஸ் கட்சியை மகாத்மா காந்தி கலைக்கச் சொன்னார்'' என்று பேசியதையும், காங்கிரஸ் உறுப்பினர்கள் அதற்கு மறுப்பு சொன்னதையும் படித்தேன். காந்தியடிகள் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன், ‘‘வன்முறைகளற்ற வழியில் காங்கிரஸ் பல போராட்டங்களை நடத்தியதால் இந்தியா அரசியல் சுதந்திரம் பெற்று விட்டது. ஆனாலும், சமுதாய பொருளாதார சுதந்திரம் பெற வேண்டியுள்ளது. எனவே, காங்கிரசே, தன்னை மக்களுக்கு சேவை செய்யும் சேவா அமைப்பாக தன்னை மலரச் செய்துகொள்ள வேண்டும்'' என்று எழுதினார்.
காங்கிரசின் அரசியல் நோக்கம் நிறைவேறியது போல், மக்களின் நலமும் சிறந்து விளங்குவதற்கு காங்கிரஸ் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்ற பொருளிலே காந்திஜி தன் விருப்பத்தை வெளியிட்டார். அதற்கு ஆதாரமாக, அவர் மறைவதற்கு 3 நாட்களுக்கு முன் எழுதிய கடிதத்தில், ‘‘இந்தியாவின் மூத்த தேசிய அரசியல் அமைப்பு காங்கிரஸ்''. சுதந்திரம் பெற்றுத்தந்த அந்த அமைப்பு மறைந்து போக அனுமதிக்க முடியாது. இந்த நாடு வாழும்வரை காங்கிரஸ் கட்சியும் இருக்கும் என்று காந்தி குறிப்பிட்டார் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications