கொளுத்தும் வெயில்: முடிவடையும் தர்பூசணி சீசனால் மக்கள் கவலை

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. பல நகரங்களில் கடந்த ஒரு வாரமாக வெயில் 100 டிகிரியை தாண்டிவிட்டது. இதனால் குளிர்பானங்கள் பழங்களின் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது. கோடை காலங்களில அதிகம் விரும்பி உண்ணப்படும் விலை குறைவான பழமாக தர்பூசணி உள்ளது. இதில் அதிக நீர்சத்து உள்ளதாலும், ஏழைகளின் ஆப்பிள் ஜூசாக கருதப்படுவதாலும் இப்பழம் துண்டுகளாகவும், ஜூசாகவும் விறக்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கின. தென்மாவட்டங்களுக்கு திண்டுக்கல் பகுதியில் இருந்து இப்பழங்கள் கொண்டு வரப்பட்டன. ஆரம்பத்தில் இதன் விலை கிலோவுக்கு ரூ.200க இருந்தது. பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கிலோ ரூ.15க குறைந்தது. இந்த நிலையில் இப்பழங்களின் விலை கிலோவுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.22க விற்கப்படுகிறது. தர்பூசணி துண்டு ஒன்று ரூ.5க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து தர்பூசணி வியாபாரிகள் கூறுகையில், பொதுவாக தர்பூசணி பழங்களுக்கு ஜூன் வரை சீசன் இருக்கும். ஆனால் உற்பத்தியாளர்கள் அதிக விலை கிடைக்கும் என்பதால் இதை முன்னதாக பயிரிட்டு விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டனர். இதனால் சீசன் முன்னதாகவே முடிகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications