இலங்கை செல்கிறது இந்திய எம்.பிக்கள் குழு! தமிழக கட்சிகள் புறக்கணிப்பு!

இந்திய எம்.பிக்கள் 6 பேர் அடங்கிய குழு வரும் 8-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செளகதா ராய், காங்கிரஸ் கட்சியின் சந்தீப் தீக்ஷித், கெளட் யாஷ்கி, பாரதிய ஜனதாவின் பிரகாஷ் ஜவ்தேகர்,அனுராக் தாகுர், பகுஜன் சமாஜ் கட்சியின் தனஞ்ஜெய் சிங் ஆகியோர் இலங்கை செல்லும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் இந்திய தொழில் கூட்டமைப்பான பிக்கியின் இரு பிரதிநிதிகளும் இலங்கை செல்கின்றனர்.
இலங்கை செல்லும் இந்திய எம்.பி.க்கள் யாழ்ப்பாணத்துக்கும் செல்கின்றனர். அங்கு இந்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை அவர்கள் பார்வையிடுகின்றனர். குறிப்பாக இந்திய அரசு வீடு கட்டித் தரும் திட்டத்தை மேற்பார்வையிடுகின்றனர். மேலும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவையும் இந்திய எம்.பி.க்கள் குழு சந்தித்துப் பேசுகிறது.
இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே... இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கை. ஆனால் இலங்கையுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்த தமிழக எம்.பி.க்கள் அல்லாத வட இந்திய எம்.பிக்கள் குழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
இலங்கையின் வாழும் சிங்களவர்கள், இந்திய வம்சாவழியினர் என்று அண்மையில் இந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவம்சம் கூறியதைப் போலவே வட இந்திய எம்.பிக்கள் மட்டுமே அடங்கிய முழுவை மத்திய அரசு இலங்கைக்கு அனுப்பியிருக்கிறது என்று தமிழ் உணர்வாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications